கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து 888 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2077 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் இதுவரை 1917 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திருப்பியுள்ளனர் மேலும் 149 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 43 பேர் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.