பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைத்து இலங்கையர்களும் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.