கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

எத்தியோப்பியாவிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கும் விமானப்படையைச் சேர்ந்த ஒருவருக்கும் வெலிக்டை சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 81 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1955 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 115 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, 35 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.