முல்லைத்தீவு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.

களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக 5 பேராசிரியர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மதிப்பெண்ணின் அடிப்படையில் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட மாட்டார்கள் எனவும் கல்விப் பொதுத்தர உயர் தர பரீட்சை முடிவுகளின் பிரகாரமே உள்வாங்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான காணிகளை மதீப்பிடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.