கொரோனா வைரஸ் தொற்று: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் ஒருவர் பிலிப்பைன்ஸில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றுமட்டும் மேலும் 12 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 1,967 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் தற்போது 106 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு 56 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.