கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார்.

இற்கமைய தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளதாக ரோஹித்த போகொல்லாகம அறிவித்துள்ளார்.

இது தொடர்பிலான கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலளார் அகில விராஜ் காரியவசத்திற்கு அனுப்பிவைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ரோஹித்த போகொல்லாகம கிழக்கு மாகாண ஆளுநராகவும் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.