எம்.சி.சி. குறித்த ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆராய மேலும் அவகாசம் வழங்கினார் ஜனாதிபதி

அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பான ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அவசாசம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சில அமைச்சர்கள் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர்களினால் மேலதிக கால அவகாசம் தேவையாகவுள்ளதாக கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதியால் இந்த அவகாசம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டிற்கு பாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடுவதில்லை என்பதில் ஜனாதிபதி தெளிவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு தரப்பு உடன்படிக்கைகளைக் கையாளும்போது குழந்தைகள் போல அரசாங்கம் நடந்துகொள்ள முடியாது என பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.