தாயை இழந்து பரிதவித்த யானைக்குட்டி மீட்பு!

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தாயை இழந்து தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்று நேற்று(புதன்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பூவரசன்குளம் வேலன்குளம் பகுதியில் மூன்று மாதம் நிறைந்த யானைக்குட்டி ஒன்று நேற்று மாலை தனிமையில் அப்பகுதியில் இருப்பதை கண்ட சிலர் இவ்விடம் குறித்து பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார் .

இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கு சென்று யானைக்குட்டியை மீட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கிரித்தலை யானைகள் சரணாலயத்திற்கு மீட்கப்பட்ட யானைக்குட்டியை கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.