தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்

தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அம்பாறை, அக்கரைப்பற்றில் நடந்தேறியுள்ளது.

இதுகுறித்த வழக்கில், தாயையும் அவருடைய மறைமுகக் காதலனையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3 வருடங்களாக தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் குறித்த சிறுமியின் தாய் வர்த்தகர் ஒருவருடன் தொடர்பினைப் பேணி வந்துள்ளார்.

சுற்றுலா செல்வதாகக் கூறி மகளை அழைத்துச் சென்ற தாய், இரவு தங்கும் விடுதியொன்றில் மகளை தனியான அறையொன்றில் தங்க வைத்துவிட்டு குறித்த காதலனுடன் தாய் தனியாக இருந்துள்ளார்.

அத்துடன், மகளுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து, குறித்த நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த தாய் ஏற்பாடுசெய்து கொடுத்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயக்கம் தெளிந்து சிறுமி விடயத்தை உணர்ந்த போதிலும் இந்த விடயத்தை வெளியில் சொன்னால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும் என தாயும், மறைமுகக் காதலனும் சிறுமியை அச்சுறுத்தியுள்ளனர்.

எனினும், வீடுசென்று சேர்ந்த சிறுமி வேதனை தாங்க முடியாமல் உறவினரிடம் இந்த விடயத்தைக் கூறியதையடுத்து பொலிஸாரால் சந்தேகநபர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.

இதேவேளை, பாதிப்புக்குள்ளான சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் சந்தேகநபர்கள் இருவரும் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.