கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது- அனில் ஜாசிங்க

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த  மறுவாழ்வு மையத்திலுள்ள கைதிகளிடமிருந்து கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகம் பதிவாகும் போக்கு  காணப்படுவதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே, இவ்விடயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டுமெனவும் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.