இந்தியாவின் ஆதரவுடனேயே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு! சீ.வீ.கே.சிவஞானம் நம்பிக்கை

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இந்தியாவின் ஆதரவுடன்தான் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மாகாண அவைத் தலைவரும் இலங் கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவரது செவ்வியின் விவரம் வருமாறு:கேள்வி – தமிழ் மக்கள் மத்தியில் எப்பொழுது பார்த் தாலும் தமிழ்த்தலைவர்கள் அரசியல் தீர்வு இப்பொழுது வருகின்றது. அப்பொழுது வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருப்பது ஒரு வழமையான விடயமாகிப் போய்விட்டது. இந்த அரசியல் தீர்வு சார்ந்த விடயத்தில் சிங்களம் எப்பொழுதாவது அரசியல் தீர்வை முன் வைக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில் – அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதாக பாசாங்கு செய்வார்கள் என்பதுதான் கடந்த 5 வருட கால அனுபவம். அதற்கு முன்னரும் சொன்னார்கள் தான். கடைசியாகக் கொஞ்சம் படிமுறைக்கு மேலாக வந்தது. அதை நாங்கள் ஒத்துக் கொள்ளவேண்டும். மொழி சம்பந்தமாக இன்றைக்கு சிங்களம் மட்டும் சட்ட மில்லை. தமிழும் சிங்களமும் தேசிய மொழிகள் என்று வந்து விட்டதுதானே. உத்தியோகபூர்வ மொழி என்று வந்துவிட்டதுதானே. மாற்றம் நடைபெற்றதுதானே. அதேபோல் 78 ஆம் ஆண்டு அரசமைப்பிலே பௌத் தத்திற்கு முன்னுரிமை என்ற வசனம் இருக்கிறது. இன் றும் அதுதான் இருக்கிறது. ஆனால் முக்கியமான விட யம் நடந்தது. இந்த முன்மொழிவிலே என்ன நடந்தது என்றால் ஏனைய மதங்களுடைய உரிமை இப்பொழுது இந்த மதங்கள் என்ற ஏற்பாட்டுக்குள்ளே உள்ளடக்கப் பட்டுள்ளது. இப்பொழுது அது அடிப்படை உரிமைகளுக் குள் கொண்டு போய் செருகப்பட்டுள்ளது.

ஆனால்ளங்களில் சிலர் இது ஒருமதச்சார்பற்ற நாடு என்கின்றார்கள். இது எல்லாம் அர்த்தமில்லாமல் யதார்த்தமில்லாமல் நாங்கள் கதைப்பது. இந்தியா மதச் சார்பு இல்லாத நாடாக இருக்கிறது. ஆனால் பாரதீய ஜனாதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் அங்கு அப்படி நடக்கிறதா? இல்லை . நடைமுறை அப்படி, 74 வீத மான பௌத்தர்கள் மதச்சார்பற்ற நாடாக இந்த நாட்டை 

மாற்ற முடியாது என்று மறுக்கின்றார்கள். எங்களுடைய மதங்களுக்கான ஏற்பாட்டைமதங்களுக்குள் கொண்டு வந்தது முன்னேற்றம். ஆனால் அது திருப்தி இல்லை. இது மதச்சார்பற்றதல்ல. இதைக் கேட்கிறவர்களுக்கு நான் பொதுவாகச் சொல்கிறேன். தனிய ஒரு மதத்திற் குச் சொல்லவில்லை. இப்போது இருக்கின்ற நிலையில் நாங்கள் மிகக் கவனமாக இதனைக் கையாளவேண் டும். நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது உண்மை தான். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண் டும். இதுதான் யதார்த்தம்.

தந்தை செல்வாவையே ஏமாற்றியவர்கள் என்பது என்னுடைய கருத்து. இது புதியவர்களுக்குத்தெரியாது. 1965 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பட்லி சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து திருச்செல் வத்தை அமைச்சராக்கினார்கள். பின்னர் 1968 இல் பதவி விலகி யாழ்ப்பாணம் வந்தனர். என்னுடைய ஊரான கல்வியங்காட்டில் முதலாவது பொதுக் கூட்டம் நடந்தது. அப்பொழுதுமக்கள் மத்தியில் சரியான கொந் தளிப்பு நிலை காணப்பட்டது. தந்தை செல்வநாயகம் பேசஎழும்பினார். அவர்பெரிதாக ஒன்றும் பேசவில்லை . நாங்கள் அவர்களை நம்பினோம். ஏமாற்றிவிட்டார்கள். ஏமாந்து போனோம் இவ்வளவுதான் சொன்னார். அந்தச் சபையில் ஒரு சலனம். சத்தம் இல்லை . அமைதி யாக இருந்தது. தந்தை அவ்வளவுதான் சொன்னார். ஏன் நான் இதைச் சொல்கிறேன் என்றால் அவர் உண் மையைச் சொன்னார். நம்பிய எங்களை ஏமாற்றி விட்டார்கள் ஏமாந்து போனோம். இன்றைக்கும் இது இருக்கிறது. இது ஒரு வரலாறாக நடைபெறுகின்றது. இதை நாங்கள் எப்படி ஒளிப்பது. அது உண்மை . சர்வ தேசத்தையும் குறிப்பாக இந்தியாவையும் இணைத்து, இந்தியா இதில் கொண்டிருக்கின்ற தெளிவான வகியா கத்தைப் பலப்படுத்தி செயற்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. இந்தியா- இலங்கை ஒப்பந்தம் அதை உறு திப்படுத்தியது. இந்திய அரசு ஒரு அன்டரைட்டர். அந்த ஒப்பந்தத்திலே இருக்கிறது. இந்தியாவுக்கு பொறுப்பு இருக்கிறது. |

அதை நாங்கள் வலியுறுத்தவேண்டிய தேவை இருக்கிறது. அதன் ஊடாக சுமுகமான சூழலை இந் தியா மூலம் ஏற்படுத்தவேண்டும். நாங்கள் பலமாக நின்று கொண்டு இந்தியாவையும் கேட்லாம். நீங்கள் பிரிந்து பிரிந்து ஒற்றை, இரட்டை பிடித்துக் கொண்டு நின்றால் இந்தியாவும் அதில் வர வாய்ப்பு இல்லை. இதில் இந்தியாவைக் குறை சொல்லக்கூடாது. நாங்கள் பலமாக நின்றுகொண்டு மக்கள் எங்களை தெரிவு செய்வார்களோயானால் இந்தியாவைக் கூட வலுவாக நாங்கள் கேட்கலாம். நாங்கள் பலமாக நிற்கிறோம். நீங்கள்ளங்கள் பிரச்சினையில் தலையிடுங்கள் என்று கேட்கலாம். சர்வதேசத்தைக் கேட்கலாம். அதன் மூலம் நாங்கள் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் எந்த விடயமாக இருந்தாலும் இறுதி முடிவு இந்நாட்டிலே இருக்கின்ற. பதவியில் இருக்கின்ற அரசுதான் செய்ய வேண்டும். அதை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். அது சர்வதேசத் தாலேதான் முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.