எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம்!

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் கையளிக்கும் நடவடிக்கை இன்றும், நாளையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாக, பிரதேச தபால் அதிகாரிகளிடம் வாக்காளர் அட்டைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19 மற்றும் 26 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த தினங்களில் மக்கள் வீடுகளிலிருந்து தமக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.