ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாவலப்பிட்டிய மக்கள் உற்சாக வரவேற்பு

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாவலப்பிட்டியவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அப்பகுதி மக்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று (வெள்ளிக்கிழமை) களப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அதன் முதற்கட்டமாக நாவலப்பிட்டியவுக்கு  விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதியை கண்ட அப்பகுதி மக்கள், ‘ஜனாதிபதி வாழ்க’, ‘ஜனாதிபதி வாழ்க’ என கோஷம் எழுப்பி அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பலர் ஜனாதிபதியுடன் இணைந்து ஒளிப்படம் எடுத்துகொண்டனர். பின்னர் மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள மஹிந்தானந்தவுக்கு ஆதரவு வழங்கு வகையில் குறித்த பகுதிக்கு ஜனாதிபதி விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.