கிளிநொச்சியில் மாதிரி வாக்கெடுப்பு

கிளிநொச்சியில் மாதிரி வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) காலை நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலக வளாகத்தில் குறித்த மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில்,  மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கத்தின் ஊழியர்கள் மாதிரி வாக்களிப்பு முறை தொடர்பான குறித்த செயற்றிட்டத்தில் பங்கு கொண்டனர்.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.