சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியம் என்கின்றார் பிரதமர்

வடக்கு , கிழக்கில் வாழ்ந்த சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை, மிகப்பெரும் பாக்கியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால், மக்கள் பயமின்றி தமது பயணங்களை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதங்களை கையிலெடுத்த பயங்கரவாதிகளுக்கு எதிராகவே அரசாங்கம் போரிட்டது என்றும் தமிழ் மக்களுடன் அரசாங்கம் போரிடவில்லையெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தில் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த சிறுவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் இணைத்து சிறுவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்கவிட்டனர் என தெரிவித்த பிரதமர் அவற்றை அகற்றக்கிடைத்தமை பெரும் பாக்கியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பொதுஜன பெரமுன கட்சிக்கு, அதிகாரத்தை வழங்குவதன் மூலமே, நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்றும் இதனால் பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.