இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – ஒரே நாளில் 106 பேருக்கு தொற்று!

‍இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் மொத்தமாக 106 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் ஈரானில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் பெலருஸில் இருந்து வந்த 5 பேரும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த ஒருவரும் பங்களாதேஸில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் இருந்து சேனபுர மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்ட 76 கைதிகளும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 14 பேருக்கும் தொற்று உறுதியானது.

அதேநேரம், இராஜாங்கனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவருடன் தொடர்பை பேணிய 6 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில்  ஆயிரத்து 981 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதேநேரம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 625 கொரோனா நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதுடன் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 99 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

மேலும் இந்த வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.