கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 07 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2646 பேரில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்பிரகாரம் நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1988 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 647 பேர் சிகிச்சை பெற்று வரும் அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 112 பேர் வைத்திய கண்காணிப்பிலும் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.