கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள் சடலங்களாக கண்டெடுப்பு

பேருவளை – மக்கொன பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள் இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்கொன கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தமது நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, இந்த சிறுமிகள் உட்பட நான்கு பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடல் அலையில் சிக்குண்ட ஏனைய இருவரை பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து காணாமல்போன சிறுமிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வந்த நிலையில், அவர்கள் இருவரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

பேருவல பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகளே இவ்வாறு கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.