கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது.

ஓமானில் இருந்த நாடு திரும்பிய மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில் 1988 பேர் குணமடைந்துள்ளனர் என்பதுடன், 650 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்று சந்தேகத்தில் 120 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த கொடிய தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.