இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நால்வர் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நால்வர் மற்றும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்துடன் தொடர்பினைப் பேணிய குண்டசாலையைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2674 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் நேற்று பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளான 2001 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் தற்போது, 662 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் கொரோனா தொற்று சந்தேகத்தில் 150 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.