இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியீடு

இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பிசிஆர் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,  ராகமை தனியார் வைத்தியசாலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளின்படி எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குண்டசாலையில் 101 பேர், கொட்டுகொட பகுதியில் 74 பேர், தந்திரிமலை – ரந்தம்பே பகுதியில் 266 பேர்,பொலன்னறுவை வைத்தியசாலைக்கு வருகை தந்த 200 பேர், இராஜாங்கனையில் 150 பேர் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.