வடக்கு, கிழக்கிலுள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவியளிக்க இணக்கம் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு இடையிலான நீண்டகால உறவினை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த நிதியுதவி செய்யப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.