பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் ஐந்தாம் நாள் இன்று
பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் ஐந்தாம் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெறுகின்ற தபால் மூல வாக்களிப்பில் சுகாதார சேவைகள் துறை, அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்புப் படைகள், சிவில் பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் சேவையாற்றுபவர்களே வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.
மேலும் அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்கினை அளிப்பதற்கு 705,085 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை