இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,687 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனனர்.

நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 13பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்களுடன்  நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள் 8 பேரும்  கட்டாரில் இருந்து வருகைத்தந்த 3 பேரும்   ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகைதந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால், 669பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதுடன்,  2007 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.