கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் பூரண குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் இதுவரையான காலப்பகுதியல் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 2023 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 697 ஆக பதிவாகியுள்ளது.

இவர்களில் 2023 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 663 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.