இலங்கையில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 708ஆக பதிவு

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 4 பேரில் இந்தியாவிலிருந்து வந்த இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவரும் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.