எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவருக்கு கொரோனோ பரிசோதனை!

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவர், நீதிமன்றத்தின் அனுமதியுடன், கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடற்படையினரால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்ட அவர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அச்சுவேலி- வளலாயைச்  சேர்ந்த செல்வரத்தினம் செல்வதாஸ் (வயது -35) என்பவரே இவ்வாறு வழித்தடுமாறி, சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுள்ளார்.

மல்லாகம் நீதிமன்றத்தில் அவர் நேற்று முற்படுத்தப்பட்டபோதே, அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்த்து பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உள்படுத்த நீதிபதி  அனுமதியளித்துள்ளார்.

குறித்த மீனவர், நேற்று இரவு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.