கொழும்பிலுள்ள நடுத்தர குடும்பங்களுக்கு விசேட வீட்டுத்திட்டம்- மனோ கணேசன்

கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர மட்ட வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு சொந்த  வீடுகளை வழங்கும் விசேட வீட்டுத்திட்டம், சஜித் ஆட்சியில் முன்னெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில்  மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “எமது ஆட்சியில் வடகொழும்பில் தொடர்மாடி அமைத்து பின்தங்கிய குடிசைகளில் வாழுந்த 13,500 குடும்பங்களைஅங்கு குடியமர்த்தினோம்.

மேலும் தொடர்மாடிகளை அமைப்பதற்கு அடித்தளம் இட்டுள்ளோம். அதில் 10,000 குடும்பங்களை குடியமர்த்த தீர்மானித்துள்ளோம்.

கடந்த நான்கு வருடங்களில் வட கொழும்பில் குடிசைகள் வெகுவாக மறைந்து விட்டன.

இந்த வீட்டு திட்டங்களில் தமிழ், முஸ்லிம் மக்களே பெரும்பான்மையாக குடியேற்றப்பட்டார்கள்.

அதேபோன்று சஜித் தலைமையிலான எமது ஆட்சியின் கீழ் இந்த திட்டம் நடைமுறையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.