கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் மோதல் – ஐவர் படுகாயம்!

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) அதிகாலையி​ல் குறித்த நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள், கந்தகாடு, சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு ​நிலையத்தில் கொ​ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வெலிக்கந்த பொலிஸார் கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.