வாக்காளர் அட்டைகள் விநியோகம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது – தபால் திணைக்களம்!

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் சுமார் 60 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகளை விநியோகம் செய்யும் நடவடிக்கள் எதிர்வரும் நாட்களில் நிறைவடையும் என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் 4 ஆயிரத்து 363 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைகளம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.