சம்பந்தரைச் சந்தித்தனர் ஜனநாயகப் போராளிகள்!

னநாயகப் போராளிகள் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதற்கு இணந்துள்ள தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடனான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் தலைவர் சி.வேந்தன், செயலாளர் இ.இளங்கதிர், ஊடகப் பேச்சாளர் க.துளசி, உபதலைவர் நா.நகுலேஸ், மட்டக்களப்பு அம்பாறை பொறுப்பாளர் தீபன், திருகோணமலை பொறுப்பாளர் வினோத் உட்பட கட்சியின் செயற்குழு பிரதிநிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், தமிழ் மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடுகள், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்களால் ஜனநாயகப் போராளிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டினை ஜனநாயகப் போராளிகள் கட்சி மேற்கொண்டமைக்கான காரணங்கள் பற்றி ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் விவரிக்கப்பட்டதுடன் கடுமையாகப் பாடுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு ஜனநாயகப் போராளிகள் தயாராக இருப்பதாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.