இங்கிரிய மோதல் சம்பவத்தில் ஒருவர் கொலை

இங்கிரிய- ஊருகல பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 54 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

இவர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு காரணமெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.