ராஜபக்ச அரசாங்கம் பாரிய அநியாயங்களைள செய்து கொண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு.

எப்.முபாரக்
ராஜபக்ச அரசாங்கம் பாரிய அநியாயங்களை செய்துகொண்டு
முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
திருகோணமலை  மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் அப்துல்லா மஹ்ரூப்பை  ஆதரித்து, கிண்ணியா கிராமக் கோட்டு மைதானத்தில்  நேற்றிரவூ(25) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மேலும் கூறியதாவது:
இன்று அரசாங்கம் எனது சகோதரனை நூற்றியொரு நாட்களாகா அடைத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.இந்த அரசாங்கம் ஏன் இப்படி செய்து கொண்டிருக்கின்றது நான் செய்த குற்றம் தான் என்ன?
நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கு ஏதாவது வழக்கு இருக்கின்றதா? அல்லது தவறு ஏதும் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு இருக்கின்றதா? 17 வருட அமைச்சுப் பதவி உட்பட சுமார் 20 வருடகால அரசியலில், என்னைப் பற்றி போலியான கதைகளை பரப்பினார்களேயொழிய எந்தக் குற்றச்சாட்டும் பொலிஸில் இதுவரை இல்லை.
என்னை அழைத்து அமைச்சின் எவ்வாறான செயற்பாடுகள் மற்றும் உங்களுக்கும் இப்ராகிக்கும் உள்ள தொடர்புகள் என்னா என்று கேட்கின்றார்கள்.
மக்களுக்கு காணி வழங்கியதற்காக இனவாதிகள் வழக்கிட்டனர். சமூகத்துக்காக பேசியதனால் மதவாதிகள் நீதிமன்றத்தை நாடினர். வேறு எந்த தனிப்பட்ட வழக்கும் எனக்கு இதுவரை கிடையாது.
சஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை. பேசியதில்லை. தொலைபேசியில் கூட கதைத்ததும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே அந்தக் கயவனின் செயலுடன் என்னையும் தொடர்புபடுத்தி சிறையில் அடைக்க சதிகள் இடம்பெறுகின்றன.
என்னை சிறையில் அடைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க மகிந்த அரசாங்கம் செய்து வருகின்றது.
ராஜபக்ச அரசாங்கம் இன்னும் என்னாவெல்லாம் செய்ய இருக்கின்றார்களோ தெரியாது,பெரும்பான்மை ஆதரவை பெற முடியாது சிறுபான்மை தலைமைத்துவத்தை குறிவைத்து நமது கட்சியை இல்லாதொழிக்க பார்க்கின்றது.
எம்மை வீழ்த்தி பெரும்பான்மையையும் மூன்றில் இரண்டினை மகிந்த அரசாங்கம் பெறமுயற்சிக்கின்றது.
எமது விடுதலை பயணம் சமூகத்திற்கானது எமது உயிர் போனாலும் விடமாட்டேன்.
தேர்தலுக்கு முன்னர் என்னை அடைக்கலாம். எனினும், இறைவன் பாதுகாப்பான் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நமது சமுதாயத்தை அடிமைப்படுத்துவதற்காகவும் பயமுறுத்துவதற்காகவும்  சமூகத் தலைமைகளாக அங்கீகரிக்கப்பட்ட எம்மை அச்சுறுத்தி அடக்கப் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, சிறையில் அடைக்கவும் முயற்சிக்கின்றனர். எம்மை அடைப்பதன் மூலம் சமுதாயத்தை பயமுறுத்த முடியும் எனவும் திட்டமிடுகின்றனர்.
காணிப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை அனைத்தையும் பறிக்க முயற்சிக்கின்றார்கள்,நாம்ஒரு போதும்இடமளிக்க போவதில்லை
எதிர்வரும் 27 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நான் நிரபராதி. எமது நேரத்தை, காலத்தை வீணடிப்பதே இதன் நோக்கம். என்னை சிறையிலடைத்து, பெரும்பான்மையின வாக்குகளை அதிகரித்து, மூன்றிலிரண்டு பாராளுமன்ற பெரும்பான்மை எடுப்பதே இவர்களின் திட்டம். அதன்மூலம், சமூக உரிமைகளை இல்லாமல் செய்வது, சமூகத்தை கையாலாகாததாக மாற்றுவதே இவர்களின் திட்டம். இதில் மக்களாகிய நீங்கள் தெளிவாக இருந்துகொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்துகொள்ளுங்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறைத் தேர்தலில், நாற்பத்தைந்தாயிரம் வாக்குகளை பெற்று வெற்றியடைய செய்ய வேண்டும்.கிண்ணியா சமூகம் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.ம்.
பெரும்பான்மையினரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கினால், நமது சமூகம் தலைகுனிய நேரிடும். நாங்கள் அரசியல் அநாதைகளாகியும் விடுவோம். எங்களுக்கு எதுவும் நடக்கலாம். ஆனால், சமூகம் கௌரவத்துடன் வாழ வேண்டும். சமூகத்துக்கு அடித்தால் தட்டிக் கேட்கின்றோம். திருகோணமலை  மக்களாகிய உங்களுக்கு அடித்தாலும் ஓடி வருகின்றோம். நாங்கள் வரவில்லை என்றால் யார் வருவது? பொம்மைகளாக இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கின்றார்களா?
இறைவன் மக்களாகிய உங்களுக்குத் தந்த இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால், உங்களின் தலையெழுத்தை இம்முறை மாற்ற முடியும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.