சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்- சம்பந்தன்

அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவர், தீர்வுத் திட்டப்பாதையை வலுவாக்க கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ நாடாளுமன்றத்தில் முதல் கருமமாக தற்போது உள்ள அரசியல் சாசனம் சட்டப்பூர்வமானதாக இல்லாத காரணத்தினால், இந்த நிலைமை தொடருமாக இருந்தால் இலங்கை தோல்வியடைந்த நாடாக கருதப்படும்.

இன்று எமது முயற்சியின் காரணமாக நாங்கள் அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள அரசியல்வாதிகளையும் முக்கிய இராஜதந்திரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தியதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் அந்த தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு, அதனை அமுல்படுத்துவதாக உறுதியளித்தது. ஆனால் அதனை இதுவரையும் நிறைவேற்றவில்லை.

இந்த சூழ்நிலையில் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேசம், இலங்கை அரசாங்கத்துக்கு கூடிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.

அதற்கு எமது மக்கள் ஓரணியாக திரண்டு தமது ஆணையை எமக்கு தந்திருக்கிறார்கள் ஒரு  நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கு அதனை நிறைவேற்றுவதனை இனியும் தாமதப்படுத்தாமல் இருப்பதற்கு  நாங்கள் பெரும் பலமான அணியாக நாடாளுமன்றம் செல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.