இலங்கையில் கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, மேலும் ஐவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த ஐவரும் சேனபுர புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வில் உள்ளவர்கள் என தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இரண்டாயிரத்து 106 பேர் குணமடைந்துள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் 665 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.