சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி காணொலி எடுத்துவந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொலி எடுத்துவந்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை பொலிஸார் இன்று காலை கைது செய்தனர். இவர் தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் எனவும் சுமார் 10 வருடங்களாக அவர் இவ்வாறான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபரிடமிருந்து சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அவர் எடுத்த காணொலிகள் சிலவற்றையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 3 சிறுவர்கள் நேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையைில் மற்றுமொரு மாணவரும் இன்றைய தினம் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

3Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.