அநுரகுமார, ஷானி அபேசேகர ஆகியோர் ஆணைக்குழுவில் ஆஜராகவேண்டிய அவசியம் இல்லை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அநுரகுமார திஸாநாயக்க, ஷானி அபேசேகர மற்றும் ஜனக பண்டார ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தமக்கு விடுக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யக் கோரி இவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அவன்காட் நிறுவனத்தை அடிப்படையின்றி கையக்கபடுத்தியதன் ஊடாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக சாட்சியமளிக்க அநுரகுமார திஸாநாயக்க ஜூன் மாதம் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

அவன்கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நிசங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 17 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை முன்னிலையாக வேண்டிய அவசியம் இல்லை என அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.