தேர்தல் வன்முறை தொடர்பில் 5,236 முறைப்பாடுகள் பதிவு- தேசிய தேர்தல் ஆணையகம்

தேர்தல் வன்முறை தொடர்பில் 5,236 முறைப்பாடுகள் இதுவரை பதிவு  செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலான முறைப்பாடுகள்  தேர்தல் சட்டங்களை மீறுவதுடன் தொடர்பானவை என அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1,011 முறைப்பாடுகளும்  4,225 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.