கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோரின் வருகையை எதிர்பார்த்து கொட்டும் வெய்யிலில் வாடிய மக்கள்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் போன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை எதிர்பார்த்து முள்ளிவாய்காலில் மக்கள் கொட்டும் வெய்யிலிலும் நீண்ட நேரமாக காத்திருந்ததை அவதானிக்கமுடிந்தது.
கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்தரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் 15.08இன்று சுடரேற்றி, பூத்தூவி இறுதி யுத்தத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலிகளை மேற்கொண்டு தமது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வானது காலை 09.00மணிக்கு ஆரம்பமாகும்எனக் கூறப்பட்டபோதிலும், கஜேந்தரகுமார் மற்றும் கஜேந்தரன் ஆகியோர் குறித்த நிகழ்விற்கு வருவதற்கு தமதமானதால் மக்கள் கொட்டும் வெய்யிலுக்கும் மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு முன்பாக அமர்ந்திருக்கவேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
விஜயரத்தினம் சரவணன்
கருத்துக்களேதுமில்லை