ஹெரோயின், கேரளா கஞ்சாவுடன் நாவலப்பிட்டியவில் மூவர் சிக்கினர்

நாவலப்பிட்டியவில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் மூவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம – கல்குவாரி பிரதேசத்தின் வைத்தே நாவலப்பிட்டிய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 530 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 430 மில்லிகிராம் கேரளா கஞ்சா ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் 25  – 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.