வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 494 பேர் நாடு திரும்பல்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 494 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் இன்று அதிகாலையும் நேற்றிரவும் இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து  322 பேரும், கட்டாரிலிருந்து 22 பேரும் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, ஓமானிலிருந்து 150 பேர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த விமான பயணிகள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.