உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: 5 மணியேற்றம் ருவானை துருவியது ஆணைக்குழு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் இன்று ஆஜரான முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, சுமார் 05 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, அவர் இன்று காலை, ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்திருந்தார்.

இதேவேளை, தற்போது விளக்கமறியலில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு இன்று, சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்துவரப்பட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.