வடக்கில் நாளை மின் தடை

வடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல் கட்டுப்பாட்டு மையத்தின் மின் பொறியியலாளர் அனுசா செல்வராசா அறிவித்துள்ளார்.

அதற்கமைய, நாளை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை யாழ்ப்பாண பிரதேசத்தில் நுணாவில், மட்டுவில், கல்வயல், கல்வயல் சந்திரபுரம், வேம்பிராய், மட்டுவில் இராணுவ முகாம், மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலடி ஆகிய இடங்களிலும்,

கிளிநொச்சி பிரதேசத்தில் பொன்னாவெளி, பாலாவி ஆகிய இடங்களிலும், வவுனியா பிரதேசத்தில் பகல அளுத்வத்த கிராமம், கோவில் புதுக்குளம் கிராமம், பத்தினியார் மகிழங்குளம் கிராமம், தவசிக்குளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவே குறித்த மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.