ஏமாற்று வேலை செய்யக்கூடிய தலைவர்களையே நாம் தற்போது காண்கின்றோம்

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்காக ஏமாற்று வேலை செய்யக்கூடிய தலைவர்களையே நாம் தற்போது காண்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று (20) தெல்லிப்பளை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“மாமனிதர் சிவமகாராசா தனது கொள்கையில் உறுதியுடன் இருந்த காரணத்தில்தான், தனது முதல் தெரிவின்போது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறவில்லை.

ஆனால் தற்போதுள்ள எமது தலைவர்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக ஏமாற்றுவேலை செய்யக்கூடியவர்களாக காணப்படுகின்றனர்.

அதாவது, மக்களின் உரிமை, தேசியம், கொள்கைக்காக போராடுபவர்கள் அதே கொள்கைக்காக போராடி எம்மை விட்டு பிரிந்தவர்களையும் நினைவு கூரவேண்டும். இது நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிகடன்.

ஆனால் இன்று எத்தனை பேர், இந்த நினைவு நாளில் அவர்களை நினைவு கூறுகின்றோம்?”- என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.