வெளிநாடுகளிலிருந்து மேலும் 296 பேர் வருகை
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென்கொரியாவிலும் கட்டாரிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு 296 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை