பிரதேச மாணவர்களின் நலன் கருதி நூல் தொகுதிகள் வழங்கல்

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நூலகங்களுக்கு தவிசாளர் ஏ.ம்.நௌபரினால் பிரதேச மாணவர்களின் நலன் கருதி நூல் தொகுதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர், நூலகர்கள், நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நூல் தொகுதிகளில் க.பொ.த சாதாரண தர, உயர்தர மற்றும் ஏனைய தர வகுப்பு மாணவர்களுக்குமான புதிய பாடத் திட்டத்திற்கமைவான பாட நுல்களும், பொது அறிவு, உளச்சார்பு தொடர்பான ஏனையவர்களுக்கும் பயன்படக் கூடியதுமான நூல்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ந.குகதர்சன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.