கிண்ணியாவில் 289 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!!!

ஜனாதிபதி கோத்தபாயவின் தொழில் வழங்கும் திட்டத்துக்கு ஏற்ப பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வின் ஒரு பகுதியாக கிண்ணியா பிரதேச செயலகத்திலும் இன்று (01) வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச் ஹனி தலைமையில் வழங்கி வைக்கப்பட்ட நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 289 பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்றார்கள்.

குறித்த நிகழ்வில் கிண்ணியா  பிரதேச   செயலாளர் எம்.எச்.ஹனி ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.