மின்னல் தாக்கி மனைவி சாவு – கணவன் வைத்தியசாலையில்!!!
மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்; கணவன் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வயலில் அறுவடை வேலையில் ஈடுபட்டிருந்த தம்பதியினர் மீது மின்னல் தாக்கிய நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் ஜயந்திபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மனைவி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது கணவர் பொலனறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் மின்னேரியாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை