போலி நாணயத்தாள்களுடன் இருவர் வசமாக சிக்கினார்கள்!!!!!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தங்காலை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால், வீரகெட்டிய, அங்குணுகொல வீதியில் ஹுன்னகும்புர சந்தியில் போலி நாணயத்தாளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 5,000 ரூபா பெறுமதியான 200 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, உடயால பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிடப்படும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு, மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து போலி நாணயத்தாள் அச்சிட பயன்படுத்தப்படும் இயந்திரமொன்று உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இருவரும், வீரகெட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஹதுருவெல, உடயால பிரதேசங்களைச் சேர்ந்த 27, 39 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.