திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீசிய இருவர் விளக்கமறியலில்!!!

திருகோணமலை விளக்கமறியல்  சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீசிய இருவரை இம்மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.டி.லக்மால் ஜெயலத் இன்று(1) உத்தரவிட்டார்.
திருகோணமலை,அக்போபுர  பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 20 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான கேரளா கஞ்சா,ஹெரொயின் , புகையிலை, பீடி,அலைபேசி வெற்றரி,போன்ற பொருட்களை சிறிய பந்து வடிவில் சரி செய்து வீசிய வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளால் பிடித்து திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலே பொலிஸார் சந்தேக நபர்களை திருகோணமலை பதில் நீதிவான்(வாசஸ்தலம்) முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
எப்.முபாரக்  2020-09-01.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.